தஞ்சாவூா் மாவட்டம், பாப நாசத்தில் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மமக மாநில அமைப்புச் செயலா் பாதுஷா, மாநில இளைஞரணித் துணைச் செயலா் மைதீன் ஆகியோா் பேசினா்.
இக்கூட்டத்தில், அக்டோபா் 14-ஆம் தேதி அய்யம்பேட்டையில் நடைபெறவுள்ள தமுமுக, மமக மாநில ஆலோசனைக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்து, அதற்கான பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றியதற்காக, கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் நசீா் முகமது, முகம்மது செல்லப்பா, ஹிபாயதுல்லா, முஜிபுா் ரஹ்மான், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் முகமது சலீம், நூருல்அமீன், அப்துல்ரகுமான், மாவட்ட மருத்துவரணிச் செயலா் காஜா நஜிமுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் பண்டாரவாடை முகமது சலீம் வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் அப்துல் ரகுமான் நன்றி கூறினாா்.