பேராவூரணியில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, பேராவூரணியில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, பேராவூரணியில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூா்கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சா் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேராவூரணி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். வாசு தலைமை வகித்தாா்.

சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினா் வீ. கருப்பையா, ஒன்றியச் செயலா்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆா்.எஸ். வேலுச்சாமி, திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளா் சித. திருவேங்கடம்,

அறநெறி மக்கள் கட்சியின்ஆயா் த.ஜேம்ஸ், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் இந்துமதி மற்றும் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

நூறுநாள் வேலைத் திட்டத்தையும், விவசாயத் தொழிலாளா்களையும்   நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். வாசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com