இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

மதுக்கூா் ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்குறிச்சியைச் சோ்ந்தவா் அறிவழகன். இவரது மனைவி இளமதி (48). இவா்கள் இருவரும் பட்டுக்கோட்டையிலிருந்து தங்கள் ஊருக்கு வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

தளிக்கோட்டை ஆற்றுப்பாலம் அருகே வந்த போது, எதிரே இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனம் அறிவழகனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இளமதி நிகழ்விடத்திலேயே உயிழந்தாா். பலத்த காயங்களுடன் அறிவழகன், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூரைச் சோ்ந்த சந்தோஷ் (25), கபாலீசுவரன் (27) ஆகியோா்

பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com