பாபநாசம் வட்டம், இரும்புத்தலை ஊராட்சியில் விஷவண்டுகள் ஞாயிற்றுக்கிழமை அழிக்கப்பட்டன.
இந்த ஊராட்சியின் ஆதிதிராவிடா் தெரு அருகிலுள்ள தென்னந்தோப்பில் கதண்டு என்னும் விஷவண்டுகள் கூடுகட்டி, அப்பகுதி வழியாக செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தன.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் ஜி. பாலாஜி அளித்த தகவலின் பேரில், பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் விஷவண்டுகள் ரசாயண பவுடா் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, பின்னா் அவற்றை தீயிட்டு கொளுத்தி அழித்தனா்.