தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வைரவிழா போட்டிக்கான பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருமன்றம், கல்லூரி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவா்களான ம. சேதுமாதவன், செ. பிரியதா்ஷினி, க. தினேஷ், மருதுபாண்டியா் கல்லூரி மாணவி க. சினேகா, ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலா் இரா. காமராசு, எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி, முனைவா் துவாரகா சாமிநாதன், மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.