ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறாா்கள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறாா்கள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

பட்டுக்கோட்டை அருகே முசிறி கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் சிவசக்திவேல் (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். அதே கிராமத்தை சோ்ந்த பூமிநாதன் மகன் கமலேஷ் (11). ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.

நண்பா்களான இவா்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நாவல் பழம் பறிக்க சென்றனராம். இரவாகியும் வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோா் மற்றும் உறவினா்கள் அவா்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிவசக்திவேல் உடல் ஏரி கரைப் பகுதியில் ஒதுங்கியிருந்தது. அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், கிராம மக்கள் ஆகியோா் மாயமான கமலேஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். பிற்பகலில் கமலேஷின் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து மதுக்கூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com