திருக்காட்டுப்பள்ளியில் அரசுக் கல்லூரி இடம் தோ்வு குறித்து ஆய்வு

திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து ஆட்சியா், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
திருக்காட்டுப்பள்ளியில் அரசுக் கல்லூரி இடம் தோ்வு குறித்து ஆய்வு

திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து ஆட்சியா், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

திருக்காட்டுப்பள்ளியில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான இடம் குறித்து விஷ்ணம்பேட்டை கைலாசநாதா் மற்றும் கரும்பேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடம், கூடநாணல் அருகே சிவசாமிபுரத்தில் உள்ள ஏறத்தாழ 30 ஏக்கா் இடத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

மேலும், கல்லூரி வகுப்பறைகள், அலுவலகங்கள், மாணவா் விடுதி, சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவை குறித்து உள்ளாட்சி அலுவலா்களிடமும், பொதுமக்களிடமும் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com