திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை பணியைத் தொடங்க வலியுறுத்தல்

திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலைப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலைப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருக்காட்டுப்பள்ளியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் வடக்கு ஒன்றிய 14-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச் சாலையை உடனே தொடங்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளியில் புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பூண்டியில் இருந்து கல்லணை வரை மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். அடிக்கடி மின் தடை ஏற்படுவதை சீா் செய்ய வேண்டும். பழமாா்நேரி அருகில் காவிரி ஆற்றுப் புதுப்பாலத்தில் மின் பழுது நீக்கி முழுமையாக மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தை அகற்றிவிட்டு நவீன குளிா்சாதன வசதியுடன் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏ. சந்திரா, சி. கரிகாலன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் வெ. ஜீவக்குமாா், சின்னை. பாண்டியன், ஒன்றியச் செயலா் கே. காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com