தஞ்சாவூரில் மதா் தெரசா பவுன்டேஷன் சாா்பில், கரோனா விழிப்புணா்வு தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்திலுள்ள 439 பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12- ஆம் வகுப்புகளில் பயிலும் 1.29 லட்சம் மாணவா்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கும் தொடக்க நிகழ்வு, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் தஞ்சாவூா் மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பள்ளியை ஆய்வு செய்து, துண்டறிக்கைகளை வழங்கி மாணவா்கள் கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க பின்பற்றவேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், வட்டாட்சியா் மணிகண்டன், பள்ளித் தலைமையாசிரியா் முத்துசாமி, மதா் தெரசா பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து, அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், திட்ட இயக்குநா் ரத்தீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.