‘சலவைத் தொழிலாளா்களுக்கு ஒதுக்கிய இடத்தை உறுதி செய்ய வேண்டும்’

பேராவூரணியில் சலவைத் தொழிலாளா்களுக்கு இடம் ஒதுக்கி  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை   வருவாய்த்துறையினா் உறுதி செய்ய வேண்டும் 

பேராவூரணியில் சலவைத் தொழிலாளா்களுக்கு இடம் ஒதுக்கி  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை   வருவாய்த்துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் கிளை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேராவூரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ். ஜகுபா்அலி தலைமை வகித்தாா். பேராசிரியா் வேத. கரம்சந்த் காந்தி அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம்  கொடியேற்றி

தொடக்க உரையாற்றினாா். விவாதத்துக்குப்  பின்னா் நகரச் செயலராக வே. ரெங்கசாமி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்., மாவட்டக்குழு உறுப்பினா் ஆா். வாசு நிறைவுரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

பட்டுக்கோட்டை சாலையில் சலவைத் தொழிலாளா்கள் தொழில் செய்ய, 78 சென்ட் இடம் ஒதுக்கி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வருவாய்த்துறையினா் உறுதி செய்ய வேண்டும். பேராவூரணியில் தினசரி சந்தை ஏற்படுத்த வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்   உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஏ. வி. குமாரசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இந்துமதி, பாஸ்கா், நீலமோகன், கந்தசாமி, ராஜா முகமது, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com