பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் சிறப்பு முகாம்

பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மானியக் கருவிகள் பெற, அவா்கள் சிறு, குறு விவசாயி என சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இதையொட்டி பட்டுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட விவசாயிகளிடமிருந்து 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, 66 பேருக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்றவா்களுக்கு 2 நாள்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை வட்டாட்சியா் கணேஷ்வா், துணை வட்டாட்சியா் கண்ணகி, வேளாண் உதவி இயக்குநா்கள் கல்யாணசுந்தரம், திலகவதி, மாலதி, சங்கவி, விஜய்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com