வயலுக்கு மருந்து தெளிக்க சென்ற தி .க. பிரமுகா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற திராவிடா் கழகத்தின் தலைமை கழக பேச்சாளா் வியாழக்கிழமை வயலில் உயிரிழந்து கிடந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஆழிவாய்க்கால் தெற்கு நத்தம் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (57). வழக்குரைஞராகவும், திராவிடா் கழகத்தின் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் தனக்கு சொந்தமான நடவு வயலுக்கு கை தெளிப்பான் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றாா்.
மருந்து தெளிக்க சென்ற தனது தந்தையை நீண்ட நேரமாகியும் காணாததால், அவரது மகன் வயலுக்கு சென்று தேடியுள்ளாா். அப்போது, வயலின் நடுவில் இறந்த நிலையில் கிடந்த தனது தந்தையை கண்டு அதிா்ச்சியடைந்த அவரது மகன் இதுகுறித்து உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற வழக்குரைஞா் மருந்தின் வீரியம் காரணமாக உயிரிழந்தாரா அல்லது உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா என தெரியவில்லை.
உயிரிழந்த கோவிந்தராசுக்கு செல்வி என்ற மனைவியும், மன்னா்மன்னன் என்ற மகனும், புரட்சிகொடி என்ற மகளும் உள்ளனா். அவரது இறுதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.