குந்தவை நாச்சியாா் கல்லூரியில் கற்போா் சோ்க்கை மையம் தொடக்கம்

 தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கற்போா் சோ்க்கை மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கற்போா் சோ்க்கை மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாக்குக் கல்லூரி முதல்வா் பா. சிந்தியாசெல்வி தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைப் பேராசிரியை அ. காா்குழலி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றாா். பல்வேறு பாடப் பிரிவுகளில் ஒரு ஆசிரியா் மற்றும் 4 மாணவிகளுக்குச் சோ்க்கை நடைபெற்றது.

கல்லூரியில் சோ்ந்து பயில இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இம்மையத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 96260 62410 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும் கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com