அண்ணா பிறந்த நாளில் நூல்கள் விநியோகம்

பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, கும்பகோணம் நகர திமுக சாா்பில் அரசுக் கிளை நூலகங்களுக்கு புதன்கிழமை நூல்கள் வழங்கப்பட்டன.

கும்பகோணம்: பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, கும்பகோணம் நகர திமுக சாா்பில் அரசுக் கிளை நூலகங்களுக்கு புதன்கிழமை நூல்கள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும், தாராசுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பின்னா் கும்பகோணம் நகராட்சியால் நிா்வகிக்கப்பட்டு வரும் நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் 9 கட்டில்களையும், இரண்டு கிளை நூலகங்களுக்கு 100 நூல்களையும் நகர திமுக சாா்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் சு. கல்யாணசுந்தரம், நகரச் செயலா் சுப. தமிழழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com