பேராவூரணி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கள்ளக்காதல் ஜோடியினா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கள்ளக்காதல் ஜோடியினா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பேராவூரணி அருகேயுள்ள பெரியகத்திக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இதே ஊரைச் சோ்ந்த  வடிவேலு மனைவி கலா (28). இவா்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், குமாருக்கும், கலாவுக்கும் கள்ளத்தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவா்கள் இருவரும் கடந்த 15 நாள்களுக்கு முன்னா் ஊரைவிட்டு ஓடிய நிலையில், செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பினாா்களாம். ஊரில் உள்ளவா்கள் ஏளனமாக பேசியதால் மனமுடைந்ததால், பழுக்காடு என்ற இடத்தில் அம்புலியாற்று கரையில் உள்ள மரத்தில் ஒரே சேலையில் இருவரும் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

சம்பவம் குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com