பாபநாசம் புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை வளாகம், உழவா் சந்தை வளாகம் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
பாபநாசம் பேரூராட்சி சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வை செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பேரூராட்சி அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்த விழிப்புணா்வை கலைநிகழ்வு மூலமாக செய்து காண்பித்தனா்.