கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்து முன்னணியின் கோட்டப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மதமாற்ற பிரசாரத்தை அரசுத் தடை செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமைப்புகளைப் போராடி மீட்க வேண்டும். ஒரு வேளை விளக்க ஏற்ற இயலாத கோயில்களில் விளக்கேற்றி, வழிபாடு செய்ய அரசு முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலா் ந. முருகானந்தம் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் சண்முகசுந்தரம், இணை அமைப்பாளா் ராஜேஷ், கோட்டத் தலைவா் கனகராஜ், செயலா்கள் போஜராஜன், குணா, மோகனசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசானசிவம், பொதுச் செயலா் முருகன், மாநகரத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.