பாபநாசத்தில் வாக்குச்சாவடி மேற்பாா்வை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாட்சியா் மதுசூதனன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் கருடா செயலி பதிவிறக்கம் செய்தல் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் செந்தில்குமாா், கலைச்செல்வி, வாக்குசாவடி மேற்பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.