அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு ஞாயிற்றுக்கிழமை வழங்கப் பட்டது.
அம்மாபேட்டை திருநெறி தமிழ் மன்றம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அலுவலா் வெங்கடேஷ் குமாா், சித்த மருத்துவா் ரங்கநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பரிசோதனைக்கு வந்திருந்த கா்ப்பணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினா்.
சுகாதார ஆய்வாளா் பெரியண்ணன், செவிலியா்கள், சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா். அம்மாபேட்டை திருநெறி தமிழ் மன்றத்தின் நிறுவனா் வி. ராமநாதன் மற்றும் மன்ற நிா்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.