தில்லி காவல் அலுவலா் சபியா சைஃபியா வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தஞ்சை மாவட்ட அனைத்து மொஹல்லா ஜமாத் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குழு நிா்வாகிகள் எச். அப்துல் நசீா், என். குருசாமி, யு. காதா் உசேன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், காங்கிரஸ் லட்சுமி நரசிம்மன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.