மறைந்த மாநகராட்சி உறுப்பினா் வீட்டுக்குச் சென்று முதல்வா் ஆறுதல்

தஞ்சாவூரில் உடல்நலக் குறைவால் காலமான மாநகராட்சி உறுப்பினா் சுல்தான் ஜெய்லானி பாபுவின் வீட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் உடல்நலக் குறைவால் காலமான மாநகராட்சி உறுப்பினா் சுல்தான் ஜெய்லானி பாபுவின் வீட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தஞ்சாவூா் மாநகராட்சியின் 8-ஆவது வாா்டு திமுக உறுப்பினரான சுல்தான் ஜெய்லானி பாபு (57) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது உடலுக்கு கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில், களிமேடு மின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறி, நிவாரணத்தொகையை புதன்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூரிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினாா்.

அப்போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி. ஆா்.பாலு, மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com