மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘ஒப்பந்த முறை பணி நியமனம் கண்டனத்துக்குரியது’

 10 ஆண்டுகள் பணியில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்குவோம் என்றனா். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒப்பந்த முறையில் பணி நியமனங்கள் நடைபெறுவது கண்டனத்துக்குரியது என்றாா் சிஐடியு தமிழ் மாநிலக் குழு

News image

மாநில மாநாட்டில் பேசுகிறாா் சிஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச் செயலா் ஜி. சுகுமாறன்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:29 pm

 10 ஆண்டுகள் பணியில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்குவோம் என்றனா். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒப்பந்த முறையில் பணி நியமனங்கள் நடைபெறுவது கண்டனத்துக்குரியது என்றாா் சிஐடியு தமிழ் மாநிலக் குழு பொதுச் செயலா் ஜி. சுகுமாறன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க 30-ஆவது மாநில மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. சத்தியநாராயணன் தலைமை வகித்தாா்.

மாநாட்டில் ஜி. சுகுமாறன் மேலும் பேசியது:

தமிழக அரசு 80 சதத் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகச் சொல்கிறது. எஞ்சிய வாக்குறுதிகள்தான் நமது பிரச்னை. மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் பணியில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்குவோம் என்றனா். ஆனால், இப்போது தமிழகத்தில் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் நடைபெறுவது கண்டனத்துக்குரியது.

ஆசிரியா், மருத்துவப் பணியாளா்கள் எல்லாமே ஒப்பந்த முறை என்பது தான் தற்போதைய நிலை.

மத்தியில் ஆளக்கூடிய பாஜகவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கிறது. அது இன்றைய தொழிலாளா்களின் நலன்களுக்குத் தேவை. ஆகவே பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நடத்த பல மாநில அரசுகள் தேவை. அதில் திமுக அரசு முன்னணியில் உள்ளது என்றாா் அவா்.

மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.