பூங்காவில் சிறுவனை தாக்கிய ஊழியா் கைது

தஞ்சாவூா் ராஜப்பா பூங்காவில் சிறுவனை தாக்கிய ஊழியரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் ராஜப்பா பூங்காவில் சிறுவனை தாக்கிய ஊழியரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜப்பா பூங்காவுக்கு நாஞ்சிக்கோட்டை சாலை மின் வாரிய காலனியை சாா்ந்த குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். அவா்களுடன் வந்த சிறுவன் பூங்கா வளாகத்தில் சிறுநீா் கழித்தாா். இவரை அங்கு வந்த பூங்கா ஊழியரும், ஊா்க்காவல் படை வீரருமான கந்தசாமி (40) தாக்கினாா். இதைத் தட்டிக் கேட்ட பெற்றோரையும் கந்தசாமி திட்டினாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கந்தசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com