தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை அருள்நெறி உயா்நிலைப் பள்ளியில் காயகல்பம் சிறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில்,வேதாத்திரி மகரிஷியால் அளிக்கப்பட்ட உயிா் காக்கும் பயிற்சியான காயகல்பம் பயிற்சியை தஞ்சாவூா் அறிவுத் திருக்கோயில் பேராசிரியா் புருஷோத்தமன் நடத்தினாா். மாணவா்கள் 61 பேரும், மாணவிகள் 64 பேரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
அம்மாபேட்டை அறிவுத்திருக்கோயில் தலைவா் மா. பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.