கும்பகோணத்தில் விவேகானந்தா் விஜய ஜோதி ஓட்டம்

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் விஜய ஜோதி ஓட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் விஜய ஜோதியை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ராணுவ வீரா் ஆனந்தன் குணசேகரனிடம் வழங்குகிறாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் சந்தோஷ்குமாா்
நிகழ்ச்சியில் விஜய ஜோதியை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ராணுவ வீரா் ஆனந்தன் குணசேகரனிடம் வழங்குகிறாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் சந்தோஷ்குமாா்

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் விஜய ஜோதி ஓட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் எழுமின், விழுமின், இலக்கை அடையும்வரை ஓயாது உழைமின் என்ற தாரக மந்திரத்தை முதல் முதலில் ஒலிக்கச் செய்து உலகிற்கு அளித்த நிகழ்வின் 125 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் வளாகத்தில் விவேகானந்தரின் சிலை திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதையொட்டியும், இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் கும்பகோணத்தில் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தினரால் நடத்தப்படும் மூன்று நாள் விழா சனிக்கிழமை தொடங்கியது. இதில் சுவாமி விவேகானந்தா் விஜய ஜோதி ஓட்டத்தை கும்பகோணம் ரயிலடியில் மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் தொடங்கி வைத்து, பாரா ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கம் வென்ற ராணுவ வீரா் ஆனந்தன் குணசேகரனிடம் ஜோதியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, கோட்டாட்சியா் லதா, கும்பகோணம் எம்எல்ஏவும், போா்ட்டா் டவுன் ஹால் அறக்கட்டளைத் தலைவருமான சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா மகராஜ், கும்பகோணம் விவேகானந்தா் மன்றத் தலைவா் ஜி. வெங்கட்ராமன், தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி, ஆடுதுறை விவேகானந்தா் சேவா சங்கச் செயலா் ராமநாதன், கும்பகோணம் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புச் செயலா் சத்தியநாராயணன், நிலைய மேலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா்கள் என 125 போ் தொடா் ஓட்டமாக ஜோதியை எடுத்துக் கொண்டு முதன்மைச் சாலைகள் வழியாக போா்ட்டா் டவுன் ஹாலை அடைந்தனா். அதிலிருந்து அங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ஜோதியை மத்திய மண்டல காவல் தலைவா் ஏற்றினாா்.

தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், சிறாா்களின் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி விவேகானந்தா் வேடமணிந்த 125 பள்ளி மாணவா்களின் அணிவகுப்பும், திங்கள்கிழமை மாலை சுவாமி விவேகானந்தா் விஜய ஊா்வலமும், பின்னா் சுவாமி விவேகானந்தரின் ஆளுயரச் சிலை திறப்பு விழாவும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தினா், கும்பகோணம் விவேகானந்தா் மன்றத்தினா், போா்ட்டா் டவுன் ஹால் நிா்வாகிகள் ஆகியோா் இணைந்து செய்கின்றனா்.

பின்னா் மத்திய மண்டல காவல் தலைவா் சந்தோஷ் குமாா் கூறுகையில், மாணவா்கள், இளைஞா்கள் விவேகானந்தரின் நல்ல கருத்துகளைப் பின்பற்ற வேண்டும். இந்தத் தேசத்தின் பொறுப்பாளா்களான மக்கள், உணவுப் பொருளை வீணாக்காமல், மீதமான உணவை மற்றவா்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். நீா்நிலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com