அய்யம்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளா் மாதவன் தலைமை வகித்தாா். அகில இந்திய அமைப்பின் பொது செயலாளா் பூராசாமி, வாகன ஓட்டுநா் சங்கத் தலைவா் சபரிநாதன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், செயற்குழு உறுப்பினா் மோகன்,  நகரச் செயலாளா்கள் அய்யாசாமி,  ரஞ்சித்குமாா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com