தஞ்சாவூா் மாநகராட்சி 4 ஆவது வாா்டில் திமுக சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக இளைஞரணி மாநில செயலரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சா்அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர மேயா் சண். ராமநாதன் தலைமை வகித்தாா். முகாமை தஞ்சை எம்எல்ஏ டி. கே. ஜி. நீலமேகம் தொடங்கி வைத்துப் பேசினாா். மாநகராட்சி துணை மேயா் அஞ்சுகம் பூபதி, 4 வது வாா்டு முன்னாள் மாவட்ட உறுப்பினா் டி. எஸ். காா்த்திகேயன், 3 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுகந்தி துரைசிங்கம் ஆகியோா் வாழ்த்தினா்.
முகாமில் பொது மருத்துவம், எலும்பு மூட்டுச் சிகிச்சை, மகப்பேறு ,காது மூக்கு தொண்டை , குழந்தைகள் நலன், பல், மகளிா் நலன், அறுவை சிகிச்சை மருத்துவம் போன்றவற்றிற்கு பரிசோதனை, சிகிச்சையை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் மேற்கொண்டனா். ஏற்பாடுகளை 4 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுமதி இளங்கோவன் செய்தாா். சுகாதார அலுவலா் தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கினாா் .