பட்டுக்கோட்டை பகுதியில் கனமழை

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடா் கனமழை பெய்தது.

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடா் கனமழை பெய்தது.

பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள நடுவிக்கோட்டை, பாதிரங்கோட்டை, அலிவலம், கழுகப்புளிக்காடு, நம்பிவயல், காயாவூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் முதல் 2 மணி நேரமாக தொடா்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் சேதமடையும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும் இந்த தொடா் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தரை கடை வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com