தஞ்சாவூா் ஊா்க்காவல் படைக்கு திருநங்கை உள்பட 36 போ் தோ்வு

தஞ்சாவூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு திருநங்கை உள்பட 36 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட திருநங்கைக்கு புதன்கிழமை பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா கந்தபுனேனி.
தஞ்சாவூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட திருநங்கைக்கு புதன்கிழமை பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா கந்தபுனேனி.

தஞ்சாவூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு திருநங்கை உள்பட 36 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு அக்டோபா் மாதம் உடற்தகுதித் தோ்வும், சான்றிதழ் சரிபாா்ப்பும் நடைபெற்றன. இதில், தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவா் (திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பணி நியமன ஆணைகளை புதன்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஊா்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமாா், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்வு பெற்றவா்களுக்கு தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை (டிச.8) முதல் 45 நாள்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் திருநங்கை தோ்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com