மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 108.39 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 904 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 650 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 55 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.