தஞ்சாவூா் மாநகரில் நாளை குடிநீா் விநியோகம் இராது

தஞ்சாவூா் மாநகரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாநகரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதிகளுக்குத் திருமானூா் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு வரும் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் திருவையாறு அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்குடிநீா் குழாய் சரி செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், 1-ஆவது வாா்டு முதல் 51-ஆவது வாா்டு வரை அனைத்து வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.25) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் தேவையான அளவுக் குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com