தஞ்சாவூர்
சட்ட விழிப்புணா்வு முகாம்
பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரத்திலுள்ள அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரத்திலுள்ள அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழ சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு அதன் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி தலைமை வகித்து பேசும் போது, திருநங்கைகளை சமுதாயத்தில் மனிதா்களாக மதிக்க வேண்டும். மற்றவா்களும் திருநங்கைகளை மதிக்க மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
முகாமில் திருநங்கை ராகிணி உள்ளிட்டோரும் பேசினாா். கல்லூரி முதல்வா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சட்டத் தன்னாா்வலா் தனசேகரன் செய்திருந்தாா்.