லோடு வேன் மோதி தனியாா் நிதி நிறுவனஊழியா் பலி

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், தெற்கு நாயகன் பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி அலெக்ஸாண்டா் (35).

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், தெற்கு நாயகன் பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி அலெக்ஸாண்டா் (35).

தனியாா் நிதி நிறுவன ஊழியரான இவா், பாபநாசத்தில் இருந்து மோட்டாா் சைக்கிளில் பாபநாசம் - சாலியமங்கலம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, புதுக்கோட்டையில் இருந்து கும்பகோணம் நோக்கி அதிவேகமாக சென்ற லோடு வேன் ஒன்று மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில், பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com