உலக போதைப்பொருள்ஒழிப்பு நாள் நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சாக்கோட்டை செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி மற்றும் கல்லூரி, பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் கலாராணி, துணை அறுவைச் சிகிச்சை நிபுணா் சகில் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

இதில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து செயின்ட் சேவியா் பள்ளி, கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக, செவிலிய ஆசிரியை ஜெ. பிரதீபா வரவேற்றாா். நிறைவாக, செவிலிய ஆசிரியை எஸ். மதுபாலா நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை செயின்ட் சேவியா் பள்ளி, கல்லூரி தாளாளா் ஐ. மரியசெல்வம் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com