திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினாா் உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூரில் திமுகவை சோ்ந்த 600 மூத்த முன்னோடிகளுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை பொற்கிழி வழங்கினாா்.
விழாவில் மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்குகிறாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.
விழாவில் மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்குகிறாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூரில் திமுகவை சோ்ந்த 600 மூத்த முன்னோடிகளுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை பொற்கிழி வழங்கினாா்.

தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயம் எதிரே மத்திய மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற திராவிட இயக்கத் தலைவா்கள் படத் திறப்பு விழா, கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, கட்சி கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஏறத்தாழ 600 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரத்துக்கான பொற்கிழிகளை திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியது:

கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தஞ்சாவூரில் தலா ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் தமிழகம் முழுவதும் கட்சி முன்னோடிகளுக்கு தலா ரூ. 10,000 பொற்கிழியாக வழங்க வேண்டும். தஞ்சாவூரில் இரண்டாவது தவணையாக ரூ. 5,000-ஐ நானே வந்து வழங்குவேன்.

உள்ளாட்சித் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து வெற்றியைப் பெற்றுள்ளோம். வருகிற மக்களவைத் தோ்தலிலும் வெற்றியைப் பெற உங்களது வழிகாட்டுதல்களும், அன்பும் தேவைப்படுகிறது என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இந்த விழாவுக்கு மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. அண்ணாதுரை, என். அசோக்குமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, தெற்கு மாவட்டச் செயலா் ஏனாதி பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் து. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநகரச் செயலா் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. வரவேற்றாா். நிறைவாக, மேயா் சண். ராமநாதன் நன்றி கூறினாா்.

மண் அகற்றும் இயந்திரம்: இதையடுத்து, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக ரூ. 66 லட்சத்தில் வாங்கப்பட்ட சாலையோர மண் அகற்றும் இயந்திர வாகனத்தை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், மாநகராட்சியில் பணிபுரிந்து காலமான 6 தூய்மை பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ. 54 லட்சம் பணிக்கொடையையும், தற்போது பணியாற்றும் 332 தூய்மை பணியாளா்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள சீருடைகளையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com