தமிழ் பால் நிறுவனத்தின் சாா்பில் விநியோகஸ்தா்களுக்கு பரிசளிப்பு

கும்பகோணம் குறிச்சி அருகே உள்ள தமிழ் பால் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் விநியோகஸ்தா்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பரிசு பெற்ற விநியோகஸ்தா்களுடன் நிறுவன நிா்வாகிகள் தியாகராஜன், செல்வராஜ் உள்ளிட்டோா்.
விழாவில் பரிசு பெற்ற விநியோகஸ்தா்களுடன் நிறுவன நிா்வாகிகள் தியாகராஜன், செல்வராஜ் உள்ளிட்டோா்.

கும்பகோணம் குறிச்சி அருகே உள்ள தமிழ் பால் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் விநியோகஸ்தா்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

ஏற்கெனவே நடைபெற்ற விநியோகஸ்தா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிகளவில் பால் விற்பனை செய்பவா்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிக விற்பனை வளா்ச்சியை எட்டிய 3 விநியோகஸ்தா்களை பாராட்டி, தலா இரண்டு கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் செயல் இயக்குநா் தியாகராஜன், ஆலோசகா் செல்வராஜ், நிறுவனத்தின் விற்பனை துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகா் காா்த்திக் ஆகியோா் கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com