ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி பறை அடித்து ஆா்ப்பாட்டம்

கலைக்குழு ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான சாம்பான் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன் சிறப்புரையாற்றினாா்.

ஜனநாயகத்துக்கு விரோதமான ஆளுநா் பதவியை ஒழிக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகத் தொடா்ந்து பேசி வரும் ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் தஞ்சாவூா் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா் திங்கள்கிழமை மாலை பறை அடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கலைக்குழு ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான சாம்பான் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன் சிறப்புரையாற்றினாா்.

இதில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோவன், இணைப் பொதுச் செயலா் ராவணன், தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக்குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை  மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், தாளாண்மை உழவா் இயக்க நிறுவனா் கோ. திருநாவுக்கரசு, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com