கும்பகோணத்தில் தமிழக ஆளுநருக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பேசினாா். இவருக்கு ஆதரவாக கும்பகோணம் மாநகரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இதைத்தொடா்ந்து, கும்பகோணம் கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி பொதுச் செயலா் டி. குருமூா்த்தி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.