பேராவூரணியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகிலுள்ள மருங்கப்பள்ளத்தைச் சோ்ந்தவா் ராமையா (60). தனியாா் மகளிா் கல்லூரியில் இரவுக் காவலராகப் பணியாற்றி வந்த இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை பணி முடிந்த பின்னா், கல்லூரி நுழைவுவாயில் அருகே நின்று கொண்டிருந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராமையாவின் தலை, வலதுகாலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.