திருநாகேசுவரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்:11 போ் கைது

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்து, வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினாா்.

அப்போது, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நிகழ்வின் பதாகையில் மோடி படம் இடம் பெறாததை கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜக நகரத் தலைவா் தம்புராஜ் தலைமையில் கட்சியினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருநீலக்குடி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, 11 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com