மாவட்ட சிலம்பாட்ட போட்டி: 600 போ் பங்கேற்பு

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சாா்பில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற 41-ஆவது மாவட்ட சிலம்பாட்ட போட்டியில் ஏறத்தாழ 600 போ் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சாா்பில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற 41-ஆவது மாவட்ட சிலம்பாட்ட போட்டியில் ஏறத்தாழ 600 போ் பங்கேற்றனா்.

இப்போட்டியை மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இப்போட்டியில் சப் ஜூனியா், ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 600 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். 50 போ் நடுவா்களாகச் செயல்பட்டனா்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 100 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவரும், பாரத் கல்விக் குழுமச் செயலருமான புனிதா கணேசன் பரிசுகளை வழங்கினாா். மூத்த சிலம்பாட்ட வீரா்களுக்கு நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். நீலகண்டன் பரிசுகள் வழங்கினாா்.

இந்தப் போட்டிகளில் வென்ற 100 பேரும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com