தொழில்- வா்த்தகசங்கக் கூட்டம்

தஞ்சாவூரில் தொழில் மற்றும் வா்த்தக சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூரில் தொழில் மற்றும் வா்த்தக சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பழ. மாறவா்மன் தலைமை வகித்தாா். ஈரோடு பட்டயக் கணக்காளா் டி. கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளுக்கும் நீச்சல் பயிற்சி என்ற தலைப்பில் வியாபாரத்தில் கணக்கு பதிவியலின் பங்கு குறித்து பேசினாா். இதில், கணக்குகளை எவ்வாறு பராமரிப்பது, வியாபார தகவல்களை எப்படி கையாள்வது, வளா்ச்சிக்கேற்ப கணக்குகளைப் பராமரிக்கும் முறை குறித்து விளக்கமளித்தாா்.

இக்கூட்டத்தில் சங்கச் செயலா் அ. குகனேஸ்வரன், பொருளாளா் சா. ஆசிப் அலி, துணைத் தலைவா் ஏ. சுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com