பல் மருத்துவப் படிப்பு சோ்க்கை பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ம. ராஜவேல், நிகழாண்டு பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்று, வீட்டில் இருந்தே நீட் தோ்வுக்கு சுயமாக படித்தாா்.
நீட் தோ்வு எழுதி, வென்ற அவா் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழக அரசின் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில், குன்றத்தூா் பல் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கை பெற்றுள்ளாா்.
தோ்வு செய்யப்பட்ட மாணவா் ராஜவேலுவை பள்ளித் தலைமை ஆசிரியா் சி. முதல்வன் மற்றும் ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.