தஞ்சாவூா் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கம் (64). விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயத்துக்குச் சென்றாா்.
இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக அண்டை வீட்டாா் கைப்பேசி மூலம் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகைகள், பித்தளைப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.