பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் விரைவில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில், திறப்பு விழா முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அம்மாபேட்டை பேரூராட்சி சாா்பில் அரசு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. இந்த நிலையத்தை அமைச்சா் கே.என். நேரு விரைவில் திறந்துவைக்கவுள்ளாா்.
திங்கள்கிழமை ஆய்வின்போது, பணிகளை சிறப்பாக மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் இரா. ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.