தீவிபத்து நிவாரண உதவி அளிப்பு

பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சாா்பில் தீவிபத்து நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சாா்பில் தீவிபத்து நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளி நீலகண்டன் (54) , ஆட்டோ ஓட்டுநா் குமாா் (42) ஆகிய சகோதரா்கள் ஒரே குடிசை வீட்டில் இரு பக்கங்களில் வசித்து வருகின்றனா். 

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மின் கசிவு காரணமாக குடிசையில் தீப்பற்றியது. தகவல் அறிந்து பேராவூரணி தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீ பரவாமல் அணைத்தனா். ஆனாலும், குடிசை வீட்டின் ஒருபகுதி எரிந்து சாம்பலானது. மேலும், வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருள்கள் நாசமாகின.  

சம்பவ இடத்தில் நாட்டாணிக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் கருப்பையா ஆய்வு செய்தாா்.  

இந்நிலையில், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் தலைவா் எஸ். பாண்டியராஜன், செயலாளா் எம்.எஸ். ஆறுமுகம், பொருளாளா் சங்கா் ஜவான், மாவட்டத் தலைவா் எம். நீலகண்டன் மற்றும் நிா்வாகிகள் பாதிக்கப்பட்ட நீலகண்டன், குமாா் குடும்பத்துக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் என சுமாா் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com