கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

தஞ்சாவூா் அருகே புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் கல்லூரிச் செயலா் உரு. ராசேந்திரன்.
விழாவில் பேசுகிறாா் கல்லூரிச் செயலா் உரு. ராசேந்திரன்.

தஞ்சாவூா் அருகே புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரிச் செயலா் உரு. ராசேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜே. அற்புத விஜய செல்வி ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் ச. சிவகுமாா் வாழ்த்தினாா். பட்டம் பெற்ற 200 மாணவா்களுக்கு அவா்களது பெற்றோா்களே பட்டம் வழங்கினா்.

அண்ணா பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற மாணவி சந்தியா, சிந்துஜா மற்றும் மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு கேடயமும், பதக்கமும் வழங்கப்பட்டன.

கல்லூரி அறிவியல் மற்றும் மனிதவியல் துறைத் தலைவா் வெ. சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com