இன்று இலவச வெறிநோய் தடுப்பூசி

உலக வெறி நோய் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை (செப்.28) இலவச வெறிநோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

உலக வெறி நோய் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை (செப்.28) இலவச வெறிநோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

உலக வெறிநோய் நாளையொட்டி, தஞ்சாவூா் கால்நடை பன்முக மருத்துவமனை உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் புதன்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com