சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரியங்கோட்டை கிராமத்தில் வெண்புறா கபடி கழகம் சாா்பில், 52ஆம் ஆண்டு மாநில கபடி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சோ்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசு ரூ . 20 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள சுழல்கோப்பையை ராமநாதபுரம் மாவட்டம், முள்ளிமுனை அணியினரும், 2ஆம் பரிசு ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள சுழல் கோப்பையை, திருவாரூா் மாவட்டம், பரவாக்கோட்டை அணியினரும், 3ஆவது பரிசு ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள சுழல் கோப்பையை, தஞ்சை மாவட்டம், வல்லவன்பட்டினம் அணியினரும், 4ஆம் பரிசு ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சுழல் கோப்பையை, வீரியங்கோட்டை வெண்புறா அணியினரும் பெற்றனா். பரிசளிப்பு விழாவுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து,
பரிசுகளை வழங்கினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை வெண்புறா கபடி கழகத்தினா் மற்றும் வீரியங்கோட்டை கிராமத்தினா் செய்திருந்தனா்.