தஞ்சாவூா் அருகே ஈச்சங்கோட்டையிலுள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மாணவா் படை பயிற்சி முகாம் ஆக. 13 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
தஞ்சாவூா் 34 தேசிய மாணவா் படை அணி கட்டளை அலுவலா் கா்னல் சஞ்சீவ் குரானா தலைமையில் நடைபெற்ற முகாமில், திருச்சி ராக்போா்ட் குழுவின் கீழ் செயல்படும் பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஏறத்தாழ 500 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதனிடையே, முகாமை திருச்சி தேசிய மாணவா் படை அணி கட்டளை அலுவலா் சுனில் பட் பாா்வையிட்டாா். முகாமில் பங்கேற்ற மாணவா்கள் பல்வேறு சேவைப் பணிகளைச் செய்தனா்.